செய்திகள்
தற்கொலை

நொய்யல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-09-12 14:01 GMT   |   Update On 2019-09-12 14:01 GMT
நொய்யல் அருகே 1 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலாயுதம் பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குந்தாணிபாளையம், பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33).இவர் பஸ்பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோகனப்ரியா(28). கடந்த 1 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த சந்திரசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News