ஆன்மிகம்
மலர் அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-09-29 04:06 GMT   |   Update On 2021-09-29 04:06 GMT
தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷன பைரவர். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி 5 கால சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.

இதுபோல திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News