ஆன்மிகம்
குருபகவான்

இலந்தையடித்தட்டு தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-12 08:14 GMT   |   Update On 2020-11-12 08:14 GMT
ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார தலமாக தென்காளஹஸ்தி சிவன் கோவில் கோவிலில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார தலமாக தென்காளஹஸ்தி சிவன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 9.50 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசி உத்ராடம் 2-ம் பாதத்தில் குருபகவான் மாறும் குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அன்று காலை கணபதி ஹோமம், 11 மணிக்கு தட்சிணாமூர்த்தி ஹோமம், இரவு 8 மணிக்கு குருஹோமம், 9 மணிக்கு குருபகவானுக்கு 13 வகையான அபிஷேகம், அலங்காரம், 9.50 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

தீபாராதனையில் மகரம், கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பரிகாரம் நடத்தப்படுகிறது. இதேபோல், மீனம், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கு அர்ச்சனையும் நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News