செய்திகள்
தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

Published On 2021-10-09 10:29 GMT   |   Update On 2021-10-09 10:29 GMT
நெல்லை மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வெட்டுவான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சி ராஜா (வயது 29). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு, ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

இதனால் இவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த பேச்சி ராஜா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

திருக்குறுங்குடி அருகே உள்ள பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவருக்கு ஏராளமாக கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 5-ந் தேதி வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல் லாமல் அவர் இறந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News