செய்திகள்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்: சிபிஎஸ்சி நிர்வாகம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் இந்தியா முழுவதும் 100 சதவீதம் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் பள்ளி திறக்கப்பட்டாலும், கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மாநிலங்கள் பள்ளிகளை திறக்கும் திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளது.
தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்ற கருத்தும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி அமைப்பு நிர்வாகிகள் குழு செயலாளர் அனுராக் திரிபாதி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் தேர்வுக்கு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.