ஆன்மிகம்
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் சம்வத்ராபிஷேகம்
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்ற நாளான நேற்று சம்வத்ராபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்ற நாளான நேற்று சம்வத்ராபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும் சொர்ணாகர்ஷன பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் டி. எஸ். பரமேஸ்வர சிவாச்சாரியார், சரவணகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.