செய்திகள்
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார் முகமது அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் பிசிசிஐ அசாருதீனை நீண்ட காலமாக கிரிக்கெட்டில் நடவடிக்கையில் இருந்த விலக்கி வைத்திருந்தது.
இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டு, குற்றமற்றவர் என நிரூபித்தார். என்றாலும் 2017-ம் ஆண்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்க பதவிக்கு விண்ணப்பத்தபோது, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 27-ம் தேதி தேர்தல் வரும் நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்தபின், ‘‘ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு கிரிக்கெட்டை வலுப்படுத்த விரும்புகிறேன். ஐதராபத்தில் உள்ள மாவட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்றார்.
இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டு, குற்றமற்றவர் என நிரூபித்தார். என்றாலும் 2017-ம் ஆண்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்க பதவிக்கு விண்ணப்பத்தபோது, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 27-ம் தேதி தேர்தல் வரும் நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்தபின், ‘‘ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு கிரிக்கெட்டை வலுப்படுத்த விரும்புகிறேன். ஐதராபத்தில் உள்ள மாவட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்றார்.