உள்ளூர் செய்திகள்
கும்பகோணம் அருகே பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் செட்டிகுளத் தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 22).
இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்தார். தமிழ்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள வாடகை பாத்திர குடோனில் பரத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே பந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் (பொ) வழக்கு பதிவு செய்து எதற்காக பரத்குமார் தற்கொலை செய்தார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் செட்டிகுளத் தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 22).
இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்தார். தமிழ்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள வாடகை பாத்திர குடோனில் பரத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே பந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் (பொ) வழக்கு பதிவு செய்து எதற்காக பரத்குமார் தற்கொலை செய்தார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.