செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னையில் நாளை முதல் இரு வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

Published On 2021-06-20 16:03 GMT   |   Update On 2021-06-20 16:03 GMT
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் ஓடும்.
சென்னை:

சென்னை மாநகரில் 40 நாள் இடைவெளிக்குப்பின் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள்  மீண்டும் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை, மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் ஓடும்.



பயணிகள், முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு சென்னை மெட்ரோ அறிவுறுத்தியுள்ளது,
Tags:    

Similar News