வழிபாடு
நெல்லை டவுனில் அய்யா வைகுண்டர் வாகன பவனி

நெல்லை டவுனில் அய்யா வைகுண்டர் வாகன பவனி

Published On 2022-03-04 05:55 GMT   |   Update On 2022-03-04 05:55 GMT
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவில், வைகுண்டர் தர்மபதியில் நேற்று அய்யா வைகுண்டர் அவதார விழா நடைபெற்றது.
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவில், வைகுண்டர் தர்மபதியில் நேற்று அய்யா வைகுண்டர் அவதார விழா நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் வாகன பவனி நடந்தது. நாராயண சுவாமி பதியில் இருந்து தொடங்கி டவுன் 4 ரதவீதிகளிலும் வலம் வந்து மீண்டும் பதியை வந்தடைந்தது. இதில் கோவில் நிர்வாகி மாணிக்கம், அய்யாபதி பண்டாரங்கள், பணிவிடையாளர்கள், அன்பு கொடி மக்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருள் இசை கச்சேரி, 8 மணிக்கு அன்னதர்மமும், 10 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை இனிமம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News