செய்திகள்
அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம், செய்யூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். அவரது மகன் காந்தி (வயது 18). மோகன் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
காந்தி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு செய்யூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டில் மின்விளக்கு எரியாததால் அதனை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.