செய்திகள்
உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), என்ற இரு மகள்களும், அமுதன் 5 என்ற ஒரு மகனும் இருந்தனர்.
பல வருடங்களாக நகை பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன், கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் இன்று காலையில் சரவணன், ஸ்ரீநிதி, இருவரும் தங்கள் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.