செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

Published On 2021-05-11 07:08 GMT   |   Update On 2021-05-11 07:08 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை  நடத்தி வந்தவர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), என்ற இரு மகள்களும், அமுதன் 5 என்ற ஒரு மகனும் இருந்தனர்.

பல வருடங்களாக நகை பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன், கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பல்வேறு  பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் இன்று காலையில் சரவணன், ஸ்ரீநிதி, இருவரும் தங்கள் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் அருந்தி  உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News