செய்திகள்
தற்கொலை

பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-30 09:26 GMT   |   Update On 2021-11-30 09:26 GMT
பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:

பேரளம் அருகே உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது34). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News