செய்திகள்
ஷ்ரேயாஸ் அய்யர், அனில் கும்ப்ளே

ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க வேண்டும்: அனில் கும்ப்ளே

Published On 2019-12-13 11:08 GMT   |   Update On 2019-12-13 11:08 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க வேண்டாம் என அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்தில் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் 4-வது இடத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை களம் இறக்கலாம் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன்.

நான் இந்தியாவின் பந்து வீச்சு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களுக்கு சவால் காத்திருக்கிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பவர்புல் ஹிட்டர்ஸ். ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் இருக்கும். ஆகவே, பந்து வீச்சு சிறப்பானதாக இருக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News