செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு

Published On 2021-08-27 06:06 GMT   |   Update On 2021-08-27 06:06 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,872-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

நேற்று பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 600-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 272 அதிகரித்து ரூ. 35 ஆயிரத்து 872-க்கு விற்றது.

கிராமுக்கு ரூ. 34 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 484 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 67 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 67.90-க்கு விற்கிறது.

கடந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தற்போது மீண்டும் பவுன் ரூ. 36 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
Tags:    

Similar News