செய்திகள்
டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு நாளை தொடக்கம்

Published On 2021-07-06 03:08 GMT   |   Update On 2021-07-06 03:08 GMT
2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதி விவரம் வருமாறு:-

17-ந்தேதி- (திருவள்ளூர், காஞ்சிபுரம்) - திருவள்ளூர் மையம்

26 மற்றும் 27-ந்தேதி- (சென்னை, டெல்லி) - சென்னை



இதுகுறித்து நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான குறிப்பாணை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News