செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

Published On 2021-10-16 11:50 GMT   |   Update On 2021-10-16 11:50 GMT
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 51,407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 5 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,412 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,462 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

இதனிடையே இதுவரை கொரோனாவுக்கு 492 பேர் பலியாகி உள்ள நிலையில் 50,376 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 594 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News