செய்திகள்
தஞ்சையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
தஞ்சையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசல் யாகூப்பியா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனது குடும்பத்தோடு, வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்றார். திருடிச்சென்ற வாலிபர் அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி செல்ல முயன்றுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சந்தேகம் அடைந்து கேட்டு அவரை பிடிக்கமுயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.