செய்திகள்
கோப்புபடம்

மளிகைகடையில் பணம் கொள்ளை - 2 வாலிபர்கள் கைது

Published On 2021-07-16 11:18 GMT   |   Update On 2021-07-16 11:18 GMT
கருமத்தம்பட்டி அருகே மளிகை கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கருமத்தம்பட்டி:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 31). இவர் அந்த பகுதியில் உள்ள ஓம் சக்தி நகரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அன்புராஜ் கடையின் உள்ளே சென்று பார்த்தார்.

கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.6,800 பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அன்பு ராஜ் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் (23), குமார் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News