செய்திகள்
புதுவை, காரைக்காலில் இயல்பை விட 2 மடங்கு அதிக மழை
புதுவை, காரைக்காலில் இயல்பை விட சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை 109.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 103.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதேகால கட்டத்தில் இயல்பாக புதுச்சேரியில் 49.2 செ.மீ. மழையும், காரைக்காலில் 60 செ.மீ. மழையும் பெய்யும். இந்த முறை சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை 109.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 103.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதேகால கட்டத்தில் இயல்பாக புதுச்சேரியில் 49.2 செ.மீ. மழையும், காரைக்காலில் 60 செ.மீ. மழையும் பெய்யும். இந்த முறை சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.