செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்தது

Published On 2020-11-27 02:01 GMT   |   Update On 2020-11-27 02:01 GMT
கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
பெங்களூரு : கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 78 ஆயிரத்து 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 1,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 560 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு புதிதாக பாகல்கோட்டையில் 7 பேர், பல்லாரியில் 13 பேர், பெலகாவியில் 31 பேர், பெங்களூரு புறநகரில் 34 பேர், பெங்களூரு நகரில் 844 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 29 பேர், சிக்கமகளூருவில் 33 பேர், சித்ரதுர்காவில் 12 பேர், தட்சிண கன்னடாவில் 57 பேர், தாவணகெரேயில் 22 பேர், தார்வாரில் 20 பேர், கதக்கில் 22 பேர், ஹாசனில் 51 பேர், ஹாவேரியில் 9 பேர், கலபுரகியில் 18 பேர், குடகில் 15 பேர், கோலாரில் 9 பேர், கொப்பலில் 6 பேர், மண்டியாவில் 24 பேர், மைசூருவில் 101 பேர், ராய்ச்சூரில் 10 பேர், ராமநகரில் 8 பேர், சிவமொக்காவில் 18 பேர், துமகூருவில் 38 பேர், உடுப்பியில் 26 பேர், உத்தர கன்னடாவில் 18 பேர், விஜயாப்புராவில் 10 பேர், யாதகிரியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 714 பேர் இறந்துள்ளனர். நேற்று புதிதாக 12 பேர் மட்டுமே இறந்து உள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு வெகுவாக குறைந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 11 ஆயிரத்து 726 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். நேற்று பெங்களூரு நகரில் 7 பேரும், பெங்களூரு புறநகர், குடகு, கோலார், மைசூரு, துமகூருவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். 24 மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 1,067 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 499 ஆக உயர்ந்து உள்ளது. 25 ஆயிரத்து 316 பேர் சிகிச்சையில் உள்ளனர். 409 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 398 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 69 லட்சத்து 557 பேரின் சளி, ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News