உள்ளூர் செய்திகள்
பழுதான ஷட்டரால் உப்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல்
எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கிடைக்காத காரணத்தினால் இன்று அந்த பணியை செய்து வருகின்றனர்.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை 24 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு 24 அடியாக முழு கொள்ளளவை எட்டியது. இந்தநிலையில் ஷட்டர்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 3 ஷட்டர்கள் உள்ள நிலையில் ஒரு ஷட்டர் வேலை செய்யவில்லை .
அதை தவிர்த்து மற்ற 2 ஷட்டர் மூலம் தண்ணீர் திறந்துவிட்டனர். நேற்று செயற்பொறியாளர் தலைமையில் பணியாளர்கள் பழுதான ஷட்டரை திறப்பதற்கு முயற்சி செய்தனர். எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கிடைக்காத காரணத்தினால் இன்று அந்த பணியை செய்து வருகின்றனர் .
இந்தநிலையில் உடனடியாக ஷட்டரை சரி செய்து இன்னும் ஒருசில தினங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.