செய்திகள்
சாத்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சாத்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதே கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 62) விற்றது தெரியவந்தது. இதையடுத்து 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதே கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 62) விற்றது தெரியவந்தது. இதையடுத்து 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.