செய்திகள்
மாநகர பஸ்-ஷேர் ஆட்டோவில் கூட்ட நெரிசலில் நகை பறிக்கும் 3 பெண்கள் கைது
சென்னை மாநகர பஸ் மற்றும் ஷேர் ஆட்டோவில் கூட்ட நெரிசலில் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் மாநகர பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்களிடம் கூட்ட நெரிசலில் நகை பறிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதையடுத்து நகை பறிக்கும் கும்பலை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம், ஜோதி, மரியா என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஷேர் ஆட்டோ, பஸ்களில் மொத்தமாக ஏறும் அவர்கள் நெரிசலில் இருப்பது போல் குறிப்பிட்ட பெண்களை குறி வைத்து தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது.
வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் மாநகர பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்களிடம் கூட்ட நெரிசலில் நகை பறிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதையடுத்து நகை பறிக்கும் கும்பலை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம், ஜோதி, மரியா என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஷேர் ஆட்டோ, பஸ்களில் மொத்தமாக ஏறும் அவர்கள் நெரிசலில் இருப்பது போல் குறிப்பிட்ட பெண்களை குறி வைத்து தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது.