செய்திகள்
பழனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
பழனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனியை அடுத்த ஆயக்குடி ஒபுளாபுரத்தை சேர்ந்த அங்கமுத்து மனைவி ராமாத்தாள் (வயது 70). நேற்று இவர் கணக்கன்பட்டி பகுதியில் திண்டுக்கல் சாலையில் மூகாம்பிகை கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.