செய்திகள்
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் மூலப்பொருட்கள்

மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரிப்பு- ஒருவர் சிக்கினார்

Published On 2021-04-12 05:43 GMT   |   Update On 2021-04-12 05:43 GMT
மேற்கு வங்காள மாநிலம் கூஜ்பெகர் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொல்கத்தா:

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளதால், மத்திய பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. கூஜ்பெகர் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாத்பரா பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ஒரு வீட்டை சோதனையிட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
Tags:    

Similar News