வழிபாடு
கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Published On 2022-01-07 04:59 GMT   |   Update On 2022-01-07 04:59 GMT
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில், அரசு உத்தரவின்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தொற்றில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில், கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவரம் அனைவரும் அறியும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் அதன் உப கோவில்களான, சோலைமலை முருகன் கோவில் மற்றும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் ஆகிய கோவில்களின் நுழைவு வாயில் அருகே அறிவிப்பு பலகை பணியாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News