செய்திகள்
கோப்புபடம்

திருமுருகன்பூண்டியில் இருந்து திருச்சிக்கு சென்ற 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

Published On 2021-09-14 09:09 GMT   |   Update On 2021-09-14 09:09 GMT
திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்ட, 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பூர்;

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்படும் கற்சிலைகள், தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இங்குள்ள ஒரு சிற்ப ஆலையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை  திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சிலையை வடிவமைத்த சிற்பி முத்துக்குமரன் கூறுகையில்:

ஊத்துக்குளியில் இருந்து 250 டன் எடையில் கல் எடுத்து வந்து இரண்டு ஆண்டுகளாக 12 சிற்ப தொழிலாளர் உழைப்பில் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினோம்.

சிலை தயாரான பின் மொத்த எடை 110 டன். அதனை இங்கிருந்து லாரி வாயிலாக கொள்ளிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

விஸ்வரூப ஆஞ்சநேயராக காட்சியளிக்கும் இந்த சிலை ஸ்ரீரங்கம்-கொள்ளிடம் அருகே தனியார் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது  என்றார்.
Tags:    

Similar News