செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
குளித்தலை அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் இரட்டைவாய்க்கால் பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, நச்சலூர் பகுதியில் மது விற்றதாக நெய்தலூர் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.