செய்திகள்
விபத்து பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2020-05-20 07:09 GMT   |   Update On 2020-05-20 07:09 GMT
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 60). இவர் வசந்தவாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஒலக்கூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு நடந்தே சென்றார். அச்சரப்பாக்கம் அருகே சென்றபோது சகாதேவன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் சகாதேவன் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News