உள்ளூர் செய்திகள்
வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன்

கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

Published On 2022-05-05 07:55 GMT   |   Update On 2022-05-05 07:55 GMT
கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை இன்று மாலை நடக்கிறது
கன்னியாகுமரி:

கொட்டாரம் பெருமாள்பு ரத்தில் அமைந்துஉள்ளது ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. 

திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மெல்லிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

9-ம் திருவிழாவான இன்று (5-ந் தேதி) மாலை 5-30 மணிக்கு தீபாராதனையும் 6 மணிக்கு பெண்கள் நடத்தும் 1008 திருவிளக்கு வழிபாடும் நடக்கிறது. 
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு திருவிளக்கு வழிபாட்டை தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பூஜையும் 8-15 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

6-ந்தேதி அதிகாலை 5.30மணிக்கு மூலஸ்தா னத்தில்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 6.30 மணிக்கு அம்மனுக்கு பூஜையும் 11 மணிக்கு மூலஸ்தான அம்ம னுக்கு பூஜையும் 12.45 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனையும்1மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும7-30 மணிக்கு சமபந்தி விருந்தும் 9 மணிக்கு மகுட கச்சேரியும் நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. 

அதைத் தொடர்ந்து ஸ்ரீவெட்டி முறிச்சான் இசக்கியம்மன் அதன் பரிவார தெய்வங்களோடு நையாண்டி மேளம், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க கோவில்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு சாமி சாஸ்தாவுக்குபூஜையும்3.30 மணிக்கு இசக்கிஅம்மனுக்கு பூஜையும்5-30மணிக்கு சுடலைமாடசுவாமி தீபாராதனையும் நடக்கிறது. காலை 6-30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் பெருமாள்புரம் ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜதுரை செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் ரவீந்திரன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 

டி.கண்ணன், நாகராஜன், ஏ.கண்ணன், மோகன், அருள் குமார், லிங்கம், ரதீஸ், மனோஜ்ராஜன், ரோவின்ராஜ், சபரீஸ் மற்றும் திருப்பணிக் குழு உறுப்பினர்கள் செல்லையா, ஆதித்தன், தங்கவேல், மணிகண்டன், பூசாரி அனீஸ்குமார், ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News