செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் அழகரசன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.