ஆன்மிகம்
சாமிதோப்பு வைகுண்டசாமி

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-12-05 07:39 GMT   |   Update On 2019-12-05 07:39 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம், அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கு கூறிய அறிவுரைகளை ஏடாக வாசிப்பது வழக்கம்.

இந்த வருட ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் முதல் நாளில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு வாகன பவனியும், தொடர்ந்து அன்ன தர்மமும் நடைபெறுகிறது.

விழாவின் 15-ம் நாளான 20-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அய்யா வைகுண்டசாமி அம்மையாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது.

முன்னதாக பக்தர்கள் அய்யாவின் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதும், முடிவில் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏடு வாசிப்பின் 17-ம் நாள் விழாவான 22-ந் தேதி தலைமை பதி பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து பெரிய ஓம் படிப்பும், பின்னர் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News