செய்திகள்
பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் 2 நாளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு?

Published On 2021-07-14 09:19 GMT   |   Update On 2021-07-14 09:19 GMT
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜூலை 31ந் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags:    

Similar News