தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் இலவச இண்டர்நெட் சலுகை மே 19 வரை நீட்டிப்பு

Published On 2020-04-27 09:18 GMT   |   Update On 2020-04-27 09:18 GMT
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வழங்கி வரும் இலவச டேட்டா சலுகை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வொர்க்@ஹோம் பிராட்பேண்ட் சலுகை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி வழங்குகிறது. இதில் தினமும் 5 ஜிபி டேட்டா நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்த சலுகை ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பிஎஸ்என்எல் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வொர்க்@ஹோம் சலுகையை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் வொர்க்@ஹோம் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டாவினை நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்குகிறது. 5ஜிபி டேட்டாவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது. 

மேலும் இதனுடன் மின்னஞ்சல் முகவரி இலவசமாகவும், 1 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித மாதாந்திர கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இத்துடன் இந்த சலுகையை பயன்படுத்த எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை. லேண்ட்லைன் சலுகையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய சலுகைகள் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News