செய்திகள்
விபத்து பலி

ஆத்தூர் அருகே மரத்தில் மொபட் மோதி முதியவர் பலி

Published On 2021-01-16 15:11 GMT   |   Update On 2021-01-16 15:11 GMT
ஆத்தூர் அருகே மரத்தில் மொபட் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறையை சேர்ந்தவர் சின்னு (வயது 73). இவர் நேற்று அரூர் அருகே உள்ள குடும்பம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை பார்த்து விட்டு மொபட்டில் ஊருக்கு சென்றார். மாம்பாடி பெருமாள் கோவில் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த பனை மரத்தில் மொபட் மோதியது. இந்த விபத்தில் சின்னு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News