செய்திகள்
பாஜக மந்திரி உபேந்திர திவாரி

பெட்ரோல் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது - உ.பி. பாஜக மந்திரி சர்ச்சை பேச்சு

Published On 2021-10-21 23:55 GMT   |   Update On 2021-10-21 23:55 GMT
இந்தியாவில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை என உத்தர பிரதேச பாஜக மந்திரி உபேந்திர திவாரி தெரிவித்தார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச அரசில் மந்திரியாக செயல்பட்டு வரும் உபேந்திர திவாரி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மந்திரி உபேந்திர திவாரி, இந்தியாவில் ஒரு சிலரே 4 சக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுகிறது. நாட்டில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை.

பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News