செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2021-09-18 10:19 GMT   |   Update On 2021-09-18 10:19 GMT
வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கண்காணித்து வந்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள சேமலைக்கவுண்டன் வலசு என்ற இடத்தில் காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கண்காணித்து வந்தனர்.

அப்போது சேமலை கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது பணம் வைத்து சீட் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. 

உடனே வெள்ளகோவில் போலீசார் வீட்டின் உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் சேகர், மணிகண்டன், மயில்ரங்கம், நடராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், கணேசன் ஆகிய 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கொண்ட சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரத்து 400யும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News