செய்திகள்
பெற்றோரை முதன் முறையாக விமானத்தில் அழைத்து சென்று மகிழ்ந்த நீரஜ் சோப்ரா
எனது பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு நனவாகியது என நீரஜ் சோப்ரா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் எறிந்து தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து உள்ளன.
இந்த நிலையில் நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், எனது பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.