செய்திகள்
விஜய் வசந்த் எம்பி கோரிக்கையை ஏற்று போலந்தில் இந்திய வீரர்களுக்கு தூதரகம் சார்பில் வரவேற்பு
போலந்து விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தூதரக நிர்வாக அதிகாரி பங்கஜ் கர்க் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வருகையின் போது அவர்களை வரவேற்று உதவிகள் செய்யுமாறு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், போலந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று தூதரக அதிகாரிகள், நேற்று இந்திய வீரர்கள் அங்கு சென்று அடைந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். தூதரக நிர்வாக அதிகாரி பங்கஜ் கர்க் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.