ஆன்மிகம்
வந்தவாசி அருகே கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வந்தவாசி அடுத்த, மருதாடு மதுரா கல்லுக்கொல்லைமேடு கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வந்தவாசி அடுத்த, மருதாடு மதுரா கல்லுக்கொல்லைமேடு கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து வேதவிற்பன்னர்கள், புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலவரான அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கும்பாபிஷேகத்தை மாம்பட்டு மகாசக்தி முத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் லட்சுமண சுவாமிகள் நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை மாம்பட்டு மகாசக்தி முத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் லட்சுமண சுவாமிகள் நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.