செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-04 18:19 GMT   |   Update On 2021-08-04 18:19 GMT
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இவருடைய மனைவி பெற்றோர் வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News