செய்திகள்
தஞ்சை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் வடக்கு மூப்பனார் தெருவை சேர்ந்த வடமலை என்பவரின் மகன் பாரதிராஜா (வயது 30). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாரதி ராஜா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதிராஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கள்ளப் பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.