தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட்போன்

பி.ஐ.எஸ். சான்று பெற்ற ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-12-01 04:21 GMT   |   Update On 2021-12-01 04:21 GMT
ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ரியல்மி நிறுவனம் விரைவில் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 9 சீரிஸ்- ரியல்மி 9, ரியல்மி 9 ஐ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளம் மற்றும் யூரேசியன் எகனாமிக் கமிஷன் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.



தற்போது ஆர்.எம்.எக்ஸ்.3392 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய 9 சீரிஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News