உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி

Published On 2021-12-05 05:54 GMT   |   Update On 2021-12-05 05:54 GMT
சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 24). இவர் ராசிபுரத்தில் இருந்து சேலத்துக்கு வரும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 27-ந் தேதி ராசிபுரத்தில் இருந்து சேலம் வரும் பஸ்சில் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்து கொண்டு வந்தார். சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் வளைவில் வேகமாக பஸ் திரும்பியபோது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த மதன்குமார் திடீரென தவறி கீழே விழுந்தார். ஓடும் பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மதன்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News