செய்திகள்
பிரதமர் மோடி

குஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்

Published On 2021-05-18 19:38 GMT   |   Update On 2021-05-18 19:38 GMT
குஜராத்தில் ‘டவ்தே’ புயல் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன.
புதுடெல்லி:

குஜராத்தில் ‘டவ்தே’ புயல் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் புயலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திரமோடி சேத விவரங்களை கேட்டறிந்தார்.



இதற்கிடையே புயல் சேதங்களை பார்வையிட மோடி இன்று (புதன்கிழமை) குஜராத் செல்கிறார். டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத்தில் உள்ள பவ்நகருக்கு செல்லும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார். மேலும் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்
Tags:    

Similar News