செய்திகள்
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து 2 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து 2 மாவட்ட செயலாளர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் டி.முரளிகிருஷ்ணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பம்மல் டி.ராஜேஷ் ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் மீறி செயல்பட்ட காரணத்தினால், அவர்கள் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் டி.முரளிகிருஷ்ணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பம்மல் டி.ராஜேஷ் ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் மீறி செயல்பட்ட காரணத்தினால், அவர்கள் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.