உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்த கல்லூரி மாணவர் சண்முக சதீஷ்.

செல்போன் டவரில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-01-11 09:53 GMT   |   Update On 2022-01-11 09:53 GMT
சிவகாசியில் செல்போன் டவரில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி

சிவகாசி ரிசர்வ் லைன் முத்துராமலிங்க காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பரது மகன் சண்முக சதீஷ் (வயது 20)  இவர் இதே பகுதியில் உள்ள கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்தார். 

நேற்று இரவு ஹவுசிங் போர்டு அருகில் உள்ள செல்போன் டவர் அருகில் சண்முக சதீஷ் மர்மமான முறையில் கால் உடைந்த நிலையில் இறந்து கிடந்தார். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முக சதீஷின்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் படித்துக் கொண்டே சண்முக சதீஷ் சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்று வந்துள்ளார்.வேலை பார்த்த சம்பளத்தை அவர் வீட்டில் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தாக தெரிகிறது.

இதில் விரக்தியடைந்த சண்முக சதீஷ் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசில் மாணவரின் தந்தை சுந்தர்ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Tags:    

Similar News