செய்திகள்
மயிலம் அருகே கார் மோதி முதியவர் பலி
மயிலம் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்:
மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(வயது 65). இவர் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.