செய்திகள்
முக அழகிரி

வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி

Published On 2020-12-01 07:23 GMT   |   Update On 2020-12-01 07:23 GMT
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று முக அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பாஜகவில் நான் இணைவதாக வெளிவரும் தகவல் வதந்தியே” என்றார்
Tags:    

Similar News